சினிமா செய்திகள்

‘காதல் செய்வீர் உலகத்தீரே…’- மக்கள் நீதி மய்ய தலைவரின் காதலர் தின வாழ்த்து..!

Published

on

இன்று சர்வதேச அளவில் காதலர் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உலகத்தார் காதல் செய்ய வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் ஜெமினி கணேசனுக்கு அடுத்து காதல் மன்னர் ஆகவே வாழ்ந்தவர் நடிகர் கமல்ஹாசன். இன்று பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து உலகத்தாரை காதல் செய்யச் சொல்லி வாழ்த்தி உள்ளார் கமல். தனது ட்விட்டர் பக்கத்தில் கமல், “காதலினால் சாதிகள் போகும். காதலினால் சமநிலை ஆகும். காதலினால் பெண்மை உயரும். பெண் உயர்ந்தால் ஆண்மை மிளிரும். மனிதர் உயர்வில் சமூகம் உயரும். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” எனக் குறிப்பிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கமலின் இந்த ட்விட்டர் பதிவுக்கு ட்விட்டர்வாசிகள் பலரும் அவரது காதல் கட்சிகளை குறு வீடியோ பதிவுகளாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending

Exit mobile version