தமிழ்நாடு

திமுக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும்: ஒப்பந்தம் கையெழுத்தன பின் கூறிய மமக தலைவர்

Published

on

பாஜகவின் சதியை முறியடிக்க திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து செய்தபின் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது

இதனை அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் இது குறித்து கூறிய போது பாஜகவின் சதியை முறியடிக்க திமுக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதால் மனிதநேய மக்கள் கட்சி ஒருசில தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்

மேலும் மனித நேய மக்கள் கட்சி எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Trending

Exit mobile version