தமிழ்நாடு

எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி: ரூ.352 கோடி ஒதுக்கியது தமிழக அரசு

Published

on

எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டுக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 எம்எல்ஏக்களும் தங்களது தொகுதியில் மேம்பாட்டு பணிகளை செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்படும் என்பது தெரிந்தது.

அந்த வகையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டுக்கு மேம்பாட்டு நிதிக்காக ரூபாய் 352 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் 50 சதவீதத்தை தமிழக அரசு சற்றுமுன் விடுவித்துள்ளது. இதனை அடுத்து அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்கள் தொகுதியில் மேம்பாட்டு பணிகளை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுதி மேம்பாட்டு பணிகள் இனிவரும் காலங்களில் விரைவாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக மக்கள் திமுக அரசுக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version