சினிமா செய்திகள்

எம்.கே.தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் உத்தரவு

Published

on

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்கே தியாகராஜ பாகவதர் என்பது அனைவரும் அறிந்ததே. அவருடைய மகள் வழி பேரன் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவதாகவும் அரசு தங்களுக்கு வீடு ஒதுக்கி, நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்

எம்கே தியாகராஜ பாகவதரின் இரண்டு மனைவிகளில் ராஜம்மாள் என்பவரின் மகள் வழி பேரன் சாய்ராம். இவரது தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டார் என்பதும் தாயாரும் தற்போது இல்லை என்பதும் பாட்டி தான் தன்னை வளர்த்ததாகவும் தனது குடும்பம் மிகுந்த கஷ்டத்தில் இருப்பதாகவும் அண்ணன் வீட்டில் தான் வசிக்கிறோம் என்றும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். புகைப்படக் கலைஞராகவும் வீடியோ படம் எடுத்தும் பணி செய்து கொண்டிருந்த இவருக்கு தற்போது தொழிலும் சரியாக இல்லை என்பதால் வறுமையில் வாடுவதாகவும் செக்யூரிட்டி மற்றும் சமையல் வேலைகள் செய்து வருவதாகவும் கூறியிருந்தார்

இந்த நிலையில் எம் கே தியாகராஜ பாகவதரின் பெயரன் வறுமையில் வாடும் போது குறித்த செய்தி அறிந்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பழம்பெரும் நடிகர் எம் கே தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து எம் கே தியாகராஜ பாகவதர் அவர்களின் பேரன் சாய்ராம் முதல்வருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version