தமிழ்நாடு
நானும் கலைஞரின் அருகிலேயே புதைக்கப்பட்டிருக்கலாம் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க உரை!
கலைஞரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க நடக்கும் பொதுக்கூட்டத்தில் தனது மனம் திறந்து பேசுவதாகக் கூறினார். அதனைத்தொடர்ந்து தான் தலைவரை மட்டுமல்ல, தன் தந்தையையும் இழந்து விட்டதாகக் கண்ணீர் மல்க கூறினார்.
தனது தந்தையின் இறுதிச் சடங்கிற்காக மெரினாவில் இடம் கேட்டு நடந்த போராட்டத்தில் அரசு தரப்பிடமிருந்து எதிர்ப்பு ஏற்பட்ட பிறகும் முதல்வர் எடப்பாடியை சந்தித்து அவரது கையைப்பிடித்துக் கெஞ்சியதாகக் கூறினார்.
கலைஞரின் அடக்கத்திற்காக மெரினாவில் இடம் வாங்கப் போராடிய பெருமை வழக்கறிஞர்களுக்கே சேரும் என நன்றியுடன் கூறினார்.
நீதிமன்ற தீர்ப்பு எதிராக வந்திருந்தால் தானும் கலைஞரின் அருகிலேயே புதைக்கப்பட்டிருக்கலாம்” என்று கண்ணீர் மல்க கூறினார்.
பல்வேறு போராட்டங்களுக்குப்பிறகு கலைஞர் இறந்த நிலையிலும் இறுதியில் வென்றதாக உருக்கத்துடன் கூறினார்.