தமிழ்நாடு
நாங்கள் வந்தால் ஜெ. மரணத்துக்கு காரணமானவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள்: ஸ்டாலின் உறுதி!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் எங்களது ஆட்சியில் ஜெயிலுக்கு செல்வார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.
வேலூர் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதிரித்து பேரணாம்பட்டு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. அது ஒரு கண்துடைப்பு விசாரணை. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலை ஜெயலலிதா மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை இந்த நாட்டுக்கு அடையாளப்படுத்துவதுதான்.
அதிமுக தொண்டர்களுக்காகவே இதனை நான் செய்தே தீருவேன் என்றார் ஆவேசமாக. மேலும் விசாரணை கமிஷன் அமைப்பது மற்றும் அதில் ஆஜராகமல் இருப்பது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்த மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமான குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் என்றார் உறுதியாக.