தமிழ்நாடு

சென்னை காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட முக ஸ்டாலின்!

Published

on

கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி முதல் முக்கிய அரசியல்வாதிகள் பலரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் சற்றுமுன் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். சென்னை காவேரி மருத்துவமனையில் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தற்போது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணியை முடித்து விட்டதால் அடுத்ததாக வேட்பாளர்களை அறிவித்துவிட்டு சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார். அதற்கு முன் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடிவு செய்த அவர் இன்று காவேரி மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இது குறித்த புகைப்படங்கள் திமுகவின் சமூக இணையதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகின்றன. திமுக தலைவர் மு க ஸ்டாலினை அடுத்து மேலும் சில தமிழக பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version