தமிழ்நாடு
ஆளுங்கட்சி எதிர்க்கட்சி பேதமின்றி மக்களுக்காக செயல்படுவோம்: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
தமிழக முதல்வராக கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்ட முக ஸ்டாலின் அவர்கள் இன்று முதல் சட்டசபை கூட்டம் தொடங்கிய உடன் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பின் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பதவிப்பிரமாணம் நிகழ்ச்சி முடிந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கொரோனா பேரிடரில் இருந்து தமிழ் நாட்டை மீட்க ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பேதங்கள் கடந்து ,மக்கள் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நோய் தடுப்பிற்காக எம்எல்ஏக்கள் அரசினை நாடினால் உடனடியாக உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட இணைந்து நிற்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: