தமிழ்நாடு

ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான்: தேர்தல் பிரச்சாரத்தில் ரஜினி வசனம் பேசிய ஸ்டாலின்!

Published

on

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக அதிமுகவுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் திமுகவுக்காக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்

அந்த வகையில் சமீபத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று விருத்தாச்சலத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் ரஜினி நடித்த ‘அருணாச்சலம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்’ என்ற வசனத்தை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்’ என்று ரஜினி வசனத்தை போல ‘ஸ்டாலின் சொல்கிறார் முதல்வர் பழனிசாமி செய்கிறார்’ என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் விருத்தாச்சலத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக முக ஸ்டாலின் என்ன வாக்குறுதிகள் கொடுக்கின்றாரோ அதை முதல்வர் நிறைவேற்றி வருவதை குறிப்பிட்டுத்தான் இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார்.

மேலும் பச்சை துண்டு போட்டவர் எல்லாம் விவசாயியா? என கேள்வி எழுப்பிய முகஸ்டாலின், விவசாயிகளுக்கு என்றும் ஆதரவாக இருப்பது திமுக ஆட்சிதான் என்றும் புதிய வேளாண்மை சட்டங்களை திமுக தொடர்ந்து இருக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார் பேசினார்

Trending

Exit mobile version