தமிழ்நாடு
‘அரசியலை விட்டு விலகுறது நீயா நானா பாத்துடுவோம்!’- ஸ்டாலின் vs வேலுமணி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வேலுமணி, ‘அரசியல் காழ்ப்புணர்சிக் காரணமாக ஸ்டாலின் என் மீது இப்படியான அவதூறான குற்றச்சாட்டுகளை சாட்டுகிறார். அதில் எதவும் உண்மையில்லை. எதற்கும் ஆதாரங்கள் இல்லை. ஸ்டாலின் மட்டும் என் மீதான புகார்களை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். எதிர்வரும் தேர்தலில் நான் போட்டியிடாமல் விலகி விடுகிறேன். அப்படி நிரூபிக்கத் தவறும் பட்சத்தில் ஸ்டாலின், திமுக தலைவர் பதவியை விட்டு விலகி, அரசியலிலிருந்து முற்றிலும் விலகத் தயாரா. இந்த சவாலுக்கு நான் இன்றே தயார்’ என்று கொதிப்புடன் பேசியுள்ளார்.
அதற்கு ஸ்டாலின், ‘வேலுமணி மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. அதை கண்டிப்பாக நிரூபிப்பேன். இப்போது அல்ல, இன்னும் நான்கே மாதங்களில் திமுக ஆட்சி அமைந்திடும். அப்போது அதை நிரூபிப்பேன். அப்போது நீங்கள் அரசியலில் இருந்து விலகினாலும் விடமாட்டேன். உங்களை சிறையில் அடைப்பேன்’ என்று பதில் சவால் விட்டுள்ளார்.