தமிழ்நாடு

உச்ச நீதிமன்றத்தை மோடி கட்டுப்பாட்டில் வைத்துள்ளாரா?: ஸ்டாலின் பேச்சின் அர்த்தம் என்ன?

Published

on

ஜனநாயகத்தின் முக்கியமான தூணாகவும், மக்களின் கடைசி நம்பிக்கையாகவும் இருப்பது நீதித்துறை ஆகும். நாட்டில் பல்வேறு தீர்ப்புகள் நீதித்துறையின் மீது மக்களுக்கு அதீத நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீதித்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு. முதல்வரோ, பிரதமரோ, மன்னரோ, சாமானியனோ எல்லாரும் நீதித்துறையின் முன் சமம். ஒரே தராசில் தான் நிற்கவைக்கப்படுகிறார்கள்.

இந்த நீதித்துறையை ஒருவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் அது மக்களாட்சியின் தத்துவத்தையும், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் கேலிக்கூத்தாக்கிவிடும். மக்களை முட்டாளாக்கும் செயலாகும். இத்தகைய நீதித்துறையின் உச்சபட்ச தலைமை நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் ஆகும். நாட்டின் மிக முக்கியமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பது உச்ச நீதிமன்றமாகும்.

இந்த உச்ச நீதிமன்றத்தை பிரதமர் மோடி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல பொருள்படும்படி பேசியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்புவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.

அதில் பேசிய திமுக தலைவர். மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி தன்னை பிரதமர் என்று நினைக்காமல் ஏதோ பரம்பரை மன்னர் ஆட்சி நடத்துவதாக மமதை கொண்ட பிரதமராக மோடி இருக்கிறார். தன்னை பிரதமராக மட்டுமல்ல ஜனாதிபதியாக, தன்னை உச்ச நீதிமன்றமாக, தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே சிபிஐயாக, தன்னையே வருமானத்துறையாக நினைத்துக்கொண்டிருக்கிறார் என குறிப்பிட்டார்.

மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சு சர்ச்சையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தன்னையே உச்ச நீதிமன்றமாக நினைத்துகொண்டிருக்கிறார் என்ற மு.க.ஸ்டாலினின் பேச்சின் அர்த்தம் என்ன? பிரதமர் மோடி உச்ச நீதிமன்றத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என ஸ்டாலின் கூறுகிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version