தமிழ்நாடு

சராசரி அறிவு கூட முதல்வருக்கு இல்லை: மு.க.ஸ்டாலின் விளாசல்!

Published

on

தமிழகம் மற்றும் தலைநகர் சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு சரிவர நடவடிக்கை எடுக்காமல் இருந்துவரும் அதிமுக தலைமையிலான தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் திமுக நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக தாக்கிப்பேசினார். குறிப்பாக சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தான் இரண்டு பக்கெட் தண்ணீர் தான் பயன்படுத்துவதாக கூறியதை விளாசி பேசினார் மு.க.ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின் அதில் கூறியதாவது, நான் எனது வீட்டில் இரண்டு வாளி தண்ணீர்தான் உபயோகிக்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். பொதுமக்கள் அதிகப்படியான தண்ணீரை உபயோகிக்கிறார்கள். அவர்களுக்கு கட்டுப்பாடு தேவை என்றும் அறிவுரை வழங்குகிறார். வேண்டிய அளவு தண்ணீர் இருந்தால் பெண்கள் குடங்களுடன் வீதியில் இறங்கிப் போராட வருவார்களா? இந்த சராசரி அறிவு கூட முதல்வருக்கு இல்லை என்பது வேதனையாக உள்ளது என விளாசினார்.

seithichurul

Trending

Exit mobile version