தமிழ்நாடு
தமிழகத்தில் கொலைகார ஆட்சி: ஸ்டாலின் காட்டம்!
![MK Stalin - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/01/MK-Stalin.jpg)
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை கொலைகார ஆட்சி என திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி திமுக தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி மக்களை சந்தித்து வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல மாவட்டங்களில் ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஓமலூர் ஒன்றியம் பாகல்பட்டி ஊராட்சியில் நடந்த திமுகவின் ஊரட்சி சபை கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாட்டிலேயே கிராமசபை கூட்டத்தை நடத்திய பெருமை திமுகவுக்குத் தான் உள்ளது என குறிப்பிட்டார்.
மேலும், போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் சென்றால் யாராவது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் என்று சொல்வார்களா, அப்படிச் சொன்னாலும் கொலைகார முதல்வர் என்றுதான் சொல்வார்கள். கொடநாடு கொலைக்குப் பக்க பலமாக இருந்திருக்கிறார், அவர் 5 கொலை செய்திருக்கிறார் என்று நீதிமன்றம் சொல்வதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார். தமிழகத்தின் இந்த அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.