தமிழ்நாடு
முதல்வரை தேவையில்லாமல் விமர்சிக்கக் கூடாது- ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அறிவுரை!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தேவையில்லாமல் கடுமையாக விமர்சித்தல் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தேவையின்றி திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் திமுக தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளது. ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகளின் மீதான விசாரணையின் போது மேற்கூறிய அறிவுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் நீதிமன்றம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. கூடுதலாக கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தேவையின்றி கடுமையான விமர்சனங்களைத் தெரிவிக்க வேண்டாம் எனவும் ஸ்டாலினுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவை விமர்சித்த காரணத்துக்காகத் தொடரப்பட்ட ஸ்டாலினுக்கு எதிரான நான்கு அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.