தமிழ்நாடு

கருத்துக்கணிப்புகளை கண்டு அதிமுகவுக்கு பயம்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Published

on

கருத்து கணிப்புகளை கண்டு அதிமுகவுக்கு பயம் என திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் திமுக கூட்டணியே வெல்லும் என்றும் திமுக கூட்டணி 170க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் கூறி வருகிறது.

இந்த நிலையில் கருத்துக் கணிப்பை அடுத்து அதிமுக சூறாவளிப் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளது என்றும் தினகரனை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் சசிகலாவுக்கு பதவி கொடுக்கவும் சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது அனைத்து கருத்துக் கணிப்புகளும் திமுக வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பை பார்த்து அதிமுக மிகவும் பயந்து உள்ளது என்றும் கருத்துக் கணிப்புகளை கண்டு அதிமுகவுக்கு பயம் வந்து விட்டதாகவும் கூறி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் அதிமுக வெற்றி பெறும் என்றும் ஒரு சில கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version