தமிழ்நாடு
நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்: முக ஸ்டாலின் அறிவுறுத்தல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள் என அதிகாரிகளுக்கு முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை கூறியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் 24,898 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இத்தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் தடையின்றி கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலர், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் மற்றும் பிற அலுவலர்களுடன் முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். pic.twitter.com/BKnv8hQi4o
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) May 6, 2021