தமிழ்நாடு

லேட்டானாலும் லேட்டஸ்டா வந்திருக்காரு மகேந்திரன் – மு.க.ஸ்டாலின் புகழாரம்

Published

on

நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்த மருத்தவர் மகேந்திரன், பத்மப்ரியா உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் இன்று சென்னையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

மகேந்திரன் மற்றும் பலர் திமுகவில் இணைந்தது குறித்து அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் வரவேற்றுக் கூறியதாவது:-

தேர்தல் அறிவித்த உடனே நான் மகேந்திரன் திமுகவுக்கு வந்து விடுவார் என்று தான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் தற்போது வந்துள்ளார். மகேந்திரன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறார். தேர்தலுக்கு முன்னரே மகேந்திரன் நம்முடன் சேர்ந்திருந்தால் கோவையிலும் கொங்கு மண்டலத்திலும் திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும்.

இப்போதும் ஒன்றும் கேட்டுப் போய்விடவில்லை. ஆட்சி அமைந்தது முதல் திமுகவின் செல்வாக்கு கொங்கு மண்டலத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்போது வந்து சேர்ந்திருக்கும் நிர்வாகிகள் மூலம் நம் செல்வாக்கு இன்னும் கூடத் தான் போகிறது. அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு ஸ்டாலின் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

seithichurul

Trending

Exit mobile version