தமிழ்நாடு
‘ஸ்டாலின் பயந்துட்டாருப்பா..!’- எல்.முருகன் அனல் பேச்சு
தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், பயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார் பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன்.
சென்னையின் திருவான்மியூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார் முருகன். அப்போது ‘மனுநீதியை தடை செய்ய வேண்டும் என்று பலரால் கோரிக்கை வைக்கப்பட்டு வருவது’ குறித்துப் பேசிய முருகன், ‘இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் எழுதிய சட்ட சாசனம்தான் அமலில் இருக்கிறது. அவர் எழுதிய சட்டத்தின்படிதான் ஆட்சி நடந்து வருகிறது. அப்படி இருக்கையில் மனுநீதிக்கு என்ன வேலை. இல்லாத மனுநீதியை எப்படி தடை செய்வது. மனுநீதியை யார் பயன்பாட்டில் வைத்திருக்கிறார்கள். எனவே இது குறித்துப் பேச வேண்டிய அவசியமே இல்லை’ என்றார்.
மேலும் மு.க.ஸ்டாலின் குறித்துப் பேசிய முருகன், ‘கடவுள் இல்லை என்று சொல்லி பிரச்சாரம் செய்தால் மக்களிடம் ஓட்டு கிடைக்காது என்று ஸ்டாலினுக்கு நன்றாகத் தெரியும். அவர் பயத்தில் இருக்கிறார்’ என்றுள்ளார்.