தமிழ்நாடு
முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கொரோனா, அவரது மகன் உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா: வைகைச் செல்வன்
முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கொரோனா, அவரது மகன் உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா என முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் விமர்சித்துள்ளார்.
தென் காசி மாவட்டம், குத்துக்கல் வலசை பகுதியில், அதிமுக இலக்கிய அணி சார்பாக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக வந்த முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், “கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருகிறோம் என்றார்கள், பெட்ரோல் டீசல் 5, 6 ரூபாய் குறைக்கிறேன் என்றார்கள் ஆனால் பெட்ரோல் விலையை 3 ரூபாய் மட்டும் குறைத்து நிறுத்திவிட்டார்கள்.
நீட் தேர்வு ரத்து செய்வோம், தன் சூத்திரம் எங்களுக்குத் தான் தெரியும் என்று சொன்னார்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை.
முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கொரோனா என்றால் அவரது மகன் உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா. இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றிபெற்றவர்கள் திமுக” என கடுமையாக அவர் சாடினார்.
இத கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜ லட்சுமி, அதிமுக இளைஞர் அணி செயலாளர் முகிலன் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.