தமிழ்நாடு

ஓ.பி.எஸ் போல தியானம் செய்து கலாய்த்த ஸ்டாலின்; விழுந்து விழுந்து சிரித்த மக்கள்!

Published

on

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமர்ந்து தியானம் செய்த நிகழ்வை கேலி செய்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் சசிகலா, அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்று முதல்வராக பொறுப்பேற்க தயாரானார். அதை விரும்பாத முதல்வராக இருந்த ஓ.பி.எஸ், சென்னை மெரினா கடற்கரையில் இருந்த ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்றார். சுமார் 45 நிமிடங்கள் அவர் அங்கு தியானம் இருந்து, ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். அதற்காக தர்ம யுத்தம் நடத்த தயார் என்றும் கூறினார். ஒரு சில நாட்களில் அவரின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கினார் சசிகலா. அதே நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. இதன் பின்னர் டிடிவி தினகரன், அதிமுகவை தன் கட்டுக்குள் வைக்க முயன்றது, அதற்கு எதிராக ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இணைந்து பதிலடி கொடுத்தது என எல்லாம் நடந்தது.

Chennai: Tamil Nadu Chief Minister O Panneerselvam sitting in a meditation in front of late J Jayalalithaa’s burial site at the Marina Beach in Chennai on Tuesday. On Sunday, he tendered his resignation from the post paving the way for AIADMK General Secretary V K Sasikala to become Chief Minister. PTI Photo by R Senthil Kumar(PTI2_7_2017_000263A)

கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ‘மக்கள் கிராம சபைக் கூட்டத்தில்’ பங்கேற்ற மு.க.ஸ்டாலின், இந்த தகவல்களை எல்லாம் சொல்லி கேலி செய்தார். ஒரு கட்டத்தில் ஓ.பி.எஸ். தியானம் இருந்த நிகழ்வை சொல்லி, அவரைப் போலவே செய்து காட்டினார் ஸ்டாலின். இதனால் கூடியிருந்த மக்கள் சிரித்தனர்.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version