தமிழ்நாடு
ஐநா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டமானது செப்டம்பர் 9-ஆம் தேதி முதக் 27-ஆம் தேதி வரை ஜெனீவாவில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் உலக நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விவாதிக்கப்படும்.
ஈழத் தமிழர்கள் நிலை, காஷ்மீர் விவகாரங்கள் என விவாதிக்க பல விஷயங்கள் இருப்பதால் இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை திமுக தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.