தமிழ்நாடு

“மோடி… உங்க வேல இங்கு எடுபடாதுப்பா!”- மு.க.ஸ்டாலின் ஆவேசம்

Published

on

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சாரி ஒரு கூட்டத்தில் பரப்புரை மேற்கொண்டுள்ளார். 

மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசியதாவது:-

தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை திணித்து மதவெறியைத் தூண்டும் அவர்களுக்கு நான் சொல்வது இது பெரியார் – அண்ணா – கலைஞர் பிறந்த மண். பெரியாரும் – அண்ணாவும் – கலைஞரும் பண்படுத்திய மண். இங்கே உங்களுடைய மோடி மஸ்தான் வேலைகள் நிச்சயமாக எடுபடாது. இந்தத் தேர்தல், ஏதோ நாம் ஆட்சிக்கு வருவதற்காக நடக்கும் தேர்தல் அல்ல. இது நம்முடைய சுய மரியாதையை காப்பாற்றுவதற்காக நடக்கும் தேர்தல் என்பதை மறந்து விடாதீர்கள்.

அதற்கு உதயசூரியன் சின்னத்திலும் – நம்முடைய கூட்டணி கட்சிகளின் சின்னங்களிலும் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தேடித் தர வேண்டும். அதற்கு உங்களது வாக்குகளை எல்லாம் மறந்து விடாமல் சிந்தாமல் சிதறாமல் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு அளித்து ஆதரவு தரவேண்டும். விவசாயிகளின் வாழ்க்கை செழிக்க வேண்டும் என்றால், மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றால், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்றால், நாம் இழந்த உரிமைகளை மீட்க வேண்டும் என்றால், அடிமையாக இருக்கும் இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்றால், உதயசூரியன் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்களின் சின்னங்களுக்கு வாக்களியுங்கள் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த மண் இந்த மண். அந்தத் தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்து நம்மையெல்லாம் விட்டு பிரிந்து அண்ணனுக்கு பக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். நாம் பெறும் வெற்றியை அவருடைய நினைவிடத்துக்கு சென்று வெற்றி மாலையாக சூட்ட வேண்டும். அதுதான் நாம் கலைஞருக்குச் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும்.

Trending

Exit mobile version