Connect with us

தமிழ்நாடு

முதல்முறையாக கோட்டையில் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!

Published

on

தமிழக முதல்வராக முதல்முறையாக பதவி ஏற்றுள்ள முக ஸ்டாலின் அவர்கள் இன்று முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.

இந்தியா முழுவதும் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள கோட்டையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன்னர் கொடியேற்றினார். முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசியக்கொடி ஏற்றிய பின் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது உரையில் ’ஏற்றத்தாழ்வு அற்ற, உயர்வு தாழ்வு அற்ற, ஒரு மனித உரிமை சமூகமாக மாற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமிழ் சமூகமானது சிந்தனையால், பண்பாட்டால், நாகரீகம் பழக்க வழக்கத்தால் உயர்வடைய வேண்டும் என்றும் அதற்கு ஏற்ற தாழ்வற்ற உயர்வு தாழ்வற்ற ஒரு மனித உரிமை சமூகமாக மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேன்மைமிகு தமிழ்நாட்டை உருவாக்க நினைக்கும் தமிழ்நாடு அரசுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் உருவாய் 6 கோடி செலவில் நவீன முறையில் புதுப்பிக்கப்படும் என்றும், கப்பலோட்டிய தமிழன் வஉ சிதம்பரனார் அவர்களின் 150வது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றும் இதுவரை ரூ.8500 வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி ரூ.9,000 ஆக ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். மேலும் கோட்டையில் கொடியேற்ற வாய்ப்பளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்றும் பொது வாழ்க்கையில் 50 ஆண்டுகள் உழைத்த நான் தமிழ்நாட்டு மக்களால் முதல்வராக ஏற்றுக்கொள்ளப்பட்டது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா29 நிமிடங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்53 நிமிடங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு3 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!