தமிழ்நாடு
“ஏன்யா, அதுக்கு யோக்கியதை இல்ல… ஆனா, ஜெ.,க்கு நினைவிடம் மட்டும் திறப்பியா..?”- எடப்பாடி கிழித்துத் தொங்கவிட்ட ஸ்டாலின்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 27 ஆம் தேதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் திறந்து வைத்தார். இந்நிலையில் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
வேலூரில் நடந்த திமுக பொதுக் கூட்டம் ஒன்றில் ஸ்டாலின் பேசிய போது, ‘ஜெயலலிதா அம்மையார் நம் அரசியல் எதிரியாக இருந்தாலும், அவர் குறித்து நாம் எந்த அவதூறும் பரப்பவில்லை. ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சொன்னது துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம்.
அந்த மரண மர்மத்தைக் கண்டுபிடிக்க ஆட்சியில் இருக்கும் அதிமுகவுக்கு யோக்கியதை இருக்கிறதா? ஆனால், அந்த அம்மையாருக்கு நினைவிடம் மட்டும் திறந்துள்ளார்கள். யாரை ஏமாற்ற இந்த கபட நாடகம்.
எடப்பாடிக்கும், ஓ.பி.எஸ்- ஸுக்கும் எப்படியும் நாம் வரப் போகிற சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடையப் போகிறோம் என்பது தெரிந்திருக்கிறது. குறைந்தபட்சம் டெபாசிட்டாவது வாங்க வேண்டும் என்பதால் தான், தற்போது ஜெயலலிதாவுக்கு நினைவிடம் திறந்துள்ளார்கள்.
எதிர் வரும் தேர்தலில் திமுக ஆட்சியமைப்பது உறுதி’ என்று பேசியுள்ளார். சுமார் 80 கோடி ரூபாய் செலவில், சென்னை, மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.