தமிழ்நாடு
திமுகவில் பிளவு.. அழகிரி போர்க்கொடி.. கலக்கத்தில் ஸ்டாலின்
சென்னை: திமுக தொண்டர்கள் எல்லோரும் தன் பக்கம் இருப்பதாக மு. க அழகிரி மெரினாவில் இருந்து பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அன்று மாலை உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். கருணாநிதியின் உடல், மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பல தலைவர்கள் இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிலையில் அவரது சமாதிக்கு இன்று மு.க அழகிரி அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் மெரினாவில் கருணாநிதி சமாதிக்கு சென்ற அழகிரி, திமுகவில் உள்ள பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
திமுகவி கட்சியினர் இடையே இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் இதனால் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.