தமிழ்நாடு

எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் ’அன்னையர் தின’ நல்வாழ்த்துகள்: முக ஸ்டாலின்

Published

on

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கடைபிடித்து வரும் நிலையில் அன்னையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பலர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் சமீபத்தில் தமிழக முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்களும் தனது தனது அன்னைக்கு வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படத்துடன் அன்னையர் தின வாழ்த்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

அவர் இதுகுறித்து கூறியதாவது: தாய்’மொழி, ‘தாய்’நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு! எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் #MothersDay நல்வாழ்த்துகள்! மகளிர் நலத்துடன் – அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்!

அதேபோல் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அன்னையர் தின வாழ்த்து குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சாதி, மத, மொழி, இன, நாடு என அனைத்து பேதங்களையும் கடந்த சுயநலமற்ற தெய்வம் “அம்மா”.

அன்பு, அக்கறை, அரவணைப்பு, தியாகம் மூலம் சமுதாயத்தை நல்வழிப்படுத்தி நாட்டை உயர்த்தும் மகாசக்தியான அன்னையர்களுக்கு மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துகள். எந்நாளும் தாய்மையை போற்றுவோம். #அன்னையர்தினம்

 

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version