தமிழ்நாடு
தமிழகத்தில் நடைபெறுவது எடுபிடி ஆட்சி, அடிமை சேவகம் செய்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் அதிரடி பிரச்சாரம்!
வேலூர் மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு அமைச்சர்கள், ஆளும் கட்சியினர் ரவுண்டு கட்டி பிரச்சாரம் செய்துவரும் நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரபிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தனது இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை நேற்று தொடங்கிய மு.க.ஸ்டாலின், மாலையில் செங்கிலிக்குப்பம் பகுதியில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது, காவிரி பிரச்சினை, நீட் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி எம்பிக்கள் உரிமைக் குரல் எழுப்பி வருகின்றனர்.
அந்த 38 குரல்களோடு 39-ஆவது குரலாக கதிர் ஆனந்தின் குரல் ஒலிக்க வேண்டும் என்றார். மேலும், தமிழகத்தில் நடைபெறுவது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியல்ல. அது எடுபிடி ஆட்சி. ஏனெனில் மத்திய அரசுக்கு கைகட்டி, வாய்பொத்தி அடிமை சேவகம் செய்கிறார்களே தவிர, மக்களைப் பற்றி கவலைப்படவில்லை என அதிரடியாக தனது தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுகவை விளாசியுள்ளார் ஸ்டாலின்.