கிரிக்கெட்

தோனி விஷயத்தில் நடந்தது மிகப்பெரிய தவறு: சச்சின் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் ஆவேசம்!

Published

on

நேற்று நடந்து முடிந்த இந்தியா, நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி வெற்றிபெற்றதின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து ஆராயப்பட்டு அவை விமர்சிக்கப்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்றாக தோனியை பின்வரிசையில் களமிறக்கியது. இந்தியாவின் முன்வரிசை விக்கெட்டுகள் குறிப்பாக முதல் மூன்று விக்கெட்டுகள் தொடக்கத்திலேயே விழுந்துவிட்டது. இது தான் இந்திய அணிக்கு முதல் எதிரியாக மாறியது. ஆனால் விக்கெட் இழப்பு தொடர்வதை தடுக்க தோனியை முன்னரே களமிறக்காதது ஏன் என தற்போது கேள்வி எழும்பியுள்ளது.

தோனியை முன்னரே அதாவது, ரிஷப் பண்ட் களமிறங்குவதற்கு முன்னரே களமிறக்கியிருந்தால் அவர் மற்ற வீரர்களை சிறப்பாக கையாண்டு விளையாட வைத்திருப்பார் அணியையும் சுலபமாக வெற்றிபெற வைத்திருப்பா என முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இது தொடர்பாக சச்சின் கூறியது, இக்கட்டான சூழலில் தோனியை முன்கூட்டியே களமிறக்கியிருக்க வேண்டும். ஹர்திக் பாண்ட்யாவிற்கு முன்பாக தோனி வந்திருக்க வேண்டும். அதேபோல தினேஷ் கார்த்திக் 5-வது இடத்தில் இறங்கியது என்னை பொருத்தவரை சரியான முடிவு இல்லை என்றார்.

விவிஎஸ் லக்ஷ்மன் கூறியபோது, ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருக்கும் முன்பே தோனி களமிறங்கியிருக்க வேண்டும். 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் தோனி நான்காவதாக களமிறங்கி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அதேபோல நேற்றும் அவர் முன்பே களமிறங்கியிருக்க வேண்டும் என்றார்.

முன்னாள் கேப்டன் கங்குலி கூறியபோது, தினேஷ் கார்த்திக்கிற்கு முன்பாக தோனி இறங்கியிருந்தால், அவர் ரிஷப் பந்த்திற்கு சரியான ஆலோசனை கூறி நிதானமாக ஆட வைத்திருப்பார். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் பவுண்டரிகள் அடிக்கவும் வலியுறுத்தியிருப்பார். இதன் மூலம் தோனி விக்கெட் சரிவையும் தடுத்திருப்பார். அத்துடன் தோனி தனது அனுபவத்தை பயன்படுத்தி நிலைமையை அறிந்து விளையாடி இருப்பார். எனவே தோனியை ஏழாவது இடத்தில் களமிறக்கியது மிகப் பெரிய தவறு என தெரிவித்தார்.

Trending

Exit mobile version