உலகம்

ரஷ்யாவை எதிர்த்து போர்க்களத்தில் துப்பாக்கியுடன் மிஸ் உக்ரைன் அழகி: வைரல் புகைப்படங்கள்!

Published

on

கடந்த 4 நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் உக்ரைனில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை ரஷ்யா பிடித்து உள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த 4500 வீரர்களை உக்ரைன் நாட்டு ராணுவம் கொன்று இருப்பதாக கூறப்பட்டு வருகிறது .

இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் பிரபலங்கள், பொதுமக்கள் தங்கள் தாய் நாட்டை காப்பதற்காக களத்தில் இறங்கி போராடி வருகின்றனர் என்பதும் விளையாட்டு வீரர்கள், சினிமா பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலரும் துப்பாக்கி ஏந்தி ரஷ்யாவுக்கு எதிராக போராடி வருகின்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அனஸ்டாசியா லென்னா என்ற அழகி தற்போது அதிரடியாக போர் களத்தில் குதித்துள்ளார். கடந்து 2015ஆம் ஆண்டு மிஸ் உக்ரைன் பட்டம் பெற்ற அனஸ்டாசியா லென்னா என்ற அழகி தனது தாய்நாட்டை காப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போராட்ட களத்தில் குதித்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் அவருடைய தாய் நாட்டு பற்றை பார்த்து அனைவரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version