தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

Published

on

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், ‘இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் பள்ளி பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறவில்லை என்பதும் இதனை அடுத்து மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது என்பதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் அமைச்சர் அவர்கள் அளித்த பேட்டி அதனை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வந்தாலும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும் என்பதை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version