தமிழ்நாடு
சென்னை மாநகராட்சிகு உட்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்தா?
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் அதிகமாக பெறப்படுவதாகவும் இதனை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் உள்ள ஒரு சில கட்சிகள் சுங்கச்சாவடிகளையே நீக்கவேண்டும் என்றும் பல நேரங்களில் போராட்டங்கள் நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சி சுங்கச்சாவடிகளில் பல நேரங்களில் போராட்டம் நடத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்கச்சாவடிகளில் மட்டும் கட்டணம் ரத்து செய்வது குறித்து பரிசீலனை நடந்து வருவதாகவும் இது குறித்த முடிவை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் 5 மேம்பாலங்களுக்கான திட்ட மதிப்பீடு தயார் ஆகிறது என்றும் அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்
சென்னையின் பல இடங்களில் சுங்கச்சாவடி இருப்பதால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் சுங்கச்சாவடி கட்டணம் நீக்கப்பட்டால் வாகன ஓட்டிகள் மிகப்பெரிய பயனடைவார்கள் என்றும் தமிழக அரசுக்கு பாராட்டு குவியும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் சுங்கச்சாவடி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இதில் சட்ட சிக்கல் ஏற்படுமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.