தமிழ்நாடு
அமைச்சர் வேலுமணி வீட்டின் மீது கல்வீச்சு!
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் முதல்வருக்கு நெருக்கமான மிக முக்கியமான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இவரது வீட்டில் கல்லெறி சம்பவம் ஒன்று நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். கோவையில் உள்ள இவரது வீட்டின் மீது கல்வீசி ஜன்னல் கண்ணாடி உடைத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.பி.வேலுமணி அமைச்சர் என்பதால் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கல் எறிந்த அந்த மர்ம நபரை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரித்த போது அவர் பாலக்காட்டைச் சேர்ந்தவர் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.