தமிழ்நாடு

எனக்கு நியாயம் வேண்டும்; நீதிமன்றத்துக்கு செல்வேன்: அமைச்சர் வேலுமணி ஆவேசம்!

Published

on

உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீது பகீர் குற்றச்சாட்டுகளை வைத்து பிரபல ஊடகமான டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டது. இதற்கு அமைச்சர் வேலுமணி மறுப்பு தெரிவித்து, இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அமைச்சர் வேலுமணி தனது ஃபேஸ்புக் பதிவில், இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யானவை. என்னை அவமானப்படுத்தும் நோக்கிலும், மக்களிடம் என் அபிமானத்தை சிதைக்கும் வகையில் உருவாக்கப்பட்டவை. என்னை குறித்து வெளியாகும் தவறான செய்திகள் டிஆர்பிக்காக கட்டமைக்கப்பட்ட பொய்யான செய்திகள் என்றார்.

மேலும் கடந்த 8-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு தரமான ஊடகத்தில் இந்த செய்தி வந்தது ஆச்சரியமாக உள்ளது. தவறான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ள அவர்கள் பல புள்ளி விவரங்களை உயர்த்தி தவறான கணக்கை காட்டுகிறார்கள். அந்த புள்ளிவிவரத்தை எப்படி கணக்கிட்டார்கள் என்று தெரியவில்லை. இது தொடர்பாக நான் நீதிமன்றத்திற்கு செல்வேன், எனக்கு நியாயம் வேண்டும். இந்த குற்றச்சாட்டை திமுக ஏற்கனவே சொன்னது அதற்கு நான் பதிலளித்துவிட்டேன் என்றார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

author avatar
seithichurul

Trending

Exit mobile version