தமிழ்நாடு
நல்ல ஆட்சி நடப்பதால் தான் மழை பெய்கிறது.. அமைச்சர் செல்லூர் ராஜூ
சினிமாவிலிருந்து புற்றீசல் போல் அரசியலுக்கு வருகிறார்கள் என்று கமல் ரஜினியை விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, தற்போது நல்ல ஆட்சி நடப்பதால் தான் மழைபெய்வதாக கூறியுள்ளார்.
மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், ‘நல்லவர்கள் ஆட்சி செய்தால் மும்மாரி பொழியும் என்பார்கள். தற்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. உண்மையில் நல்ல ஆட்சி நடப்பதால் தான் மழை பெய்கிறது.
சினிமாவில் இருந்து புற்றீசல் போல சினிமாவுக்கு வருகிறார்கள். சினிமாவில் மட்டும் தான் உடனடி முதல்வராக வர முடியும். ஏசி அறையில் இருந்து கொண்டு முதல்வராக நினைக்கிறார்கள்.
கமல் பிரச்சாரம் செய்து வருகிறார். உண்மையல் கமல் பேசுவது புரிகிறதா? கமல் பேசுவது அவருக்கும் புரியாது மக்களுக்கும் புரியாது. கட்சித் தலைவராக கூட இன்னும் அவரை மக்கள் ஏற்கவில்லை.’ இவ்வாறு கடுமையாக சாடினார்.