தமிழ்நாடு

நிவாரண பணி செய்த பாஜகவினர்களை மிரட்டினாரா அமைச்சர் சேகர்பாபு? வைரல் வீடியோ

Published

on

கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் பாஜகவினர் நிவாரண பணி செய்தபோது அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பாஜக தொண்டர்கள் மிரட்டியதாக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குற்றம் சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொளத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அந்த பகுதி மக்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர் என்றும் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால் உணவு உள்பட அடிப்படை ஆதாரம் இன்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொளத்தூர் பகுதியில் பாஜகவினர் நிவாரண பணியில் ஈடுபட்டு இருந்தனர் என்றும், அப்போது அங்கு வந்த அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பாஜக தொண்டர்களை மிரட்டியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் டுவிட்டரில் அவர் கூறியதாவது: கொளத்தூர் தொகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பாஜக தொண்டர்களை ஆளும் கட்சியினுடைய அமைச்சர் திரு. சேகர் பாபு அவர்கள் மிரட்டுவதை இந்த வீடியோவில் பார்க்க முடியும்! நீங்களும் செய்ய மாட்டீர்கள் செய்பவர்களையும் விட மாட்டீர்கள். இதுதான் திமுக கட்சியினுடைய அழகு’ என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் இது குறித்து அமைச்சர் சேகர்பாபு விரைவில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version