சினிமா செய்திகள்

’ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு விருது வழங்கப்படுமா? அமைச்சர் தகவல்

Published

on

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமேசானில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது என்பது தெரிந்ததே.

ஆனால் அதே நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக அன்புமணி இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு பெரிய அறிக்கைகளை வெளியிட்டு விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு மத்திய மாநில அரசு விருதுகள் அளிக்கக்கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்த தமிழக செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அவர்கள் ’ஜெய்பீம்’ பட பிரச்சனை சுமூகமாக பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விருது வழங்கக் கூடாது என்று வன்னியர் சங்கம் தரப்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கையில் நியாயம் இருந்தால் பரிசீலனை செய்வோம் என்றும், ஆனால் அதே நேரத்தில் திட்டமிட்டு குற்றம் சுமத்துவது ஆக இருந்தால் அவர்களது கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் கூறினார்.

இதனை அடுத்து ’ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு தமிழக அரசு விருது கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version