தமிழ்நாடு
திமுகவில் இருந்து அவங்கள முடிச்சிட்டு வாங்க: வைகோவை கிண்டலடித்த அமைச்சர்!
திமுகவில் இருந்து பிரிந்து மதிமுகவை உருவாக்கினார் வைகோ. அவர் தற்போது மீண்டும் திமுகவுடன் ஐக்கியமாக உள்ளார். ஸ்டாலினை முதல்வராக்குவதே தனது நோக்கம் என கூறி வருகிறார். தனது கட்சிக்காரர்கள் யாரும் திமுகவையோ, ஸ்டாலினையோ விமர்சிக்க கூடாது என கூறியுள்ளார்.
மதிமுக என்ற ஒரு கட்சியை வைத்துக்கொண்டு அதன் பொதுச்செயலாளராக இருக்கும் வைகோ திமுகவின் தீவிர விசுவாசியாக மாறியுள்ளது கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில் ஈழ பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் வைகோ தற்போது திமுக பக்கம் இருப்ப்பதும் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.
இலங்கைக்கு திமுக காங்கிரஸ் கூட்டணி போர் சமயத்தில் உதவி செய்ததாக சமீபத்தில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே தெரிவித்தார். இதனையடுத்து திமுக, காங்கிரஸ் கட்சியை கண்டித்து ஆளும் அதிமுக தமிழகம் முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்தியது.
இதில் விருதுநகரில் நடந்த கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஈழத்தமிழர் பிரச்சனையை எங்களைவிட அதிகம் தெரிந்தவர் வைகோ. நீங்க போய் அங்கே சேர்ந்திருக்கீங்க. ஒண்ணு வெளியே வந்திருங்க. இல்லைன்னா, அங்கேயே இருந்து அவங்கள முடிச்சிட்டு வாங்க என்றார் கிண்டலாக.