தமிழ்நாடு

கேரளா, கர்நாடகாவை அடுத்து தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கா? அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்!

Published

on

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் மிக மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தென் இந்தியாவை பொருத்தவரை கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து தமிழகத்திலும் விரைவில் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து மருத்துவ நிபுணர்கள் உடன் வரும் 31-ஆம் தேதி ஆலோசனை செய்ய உள்ளதாகவும் இந்த ஆலோசனைக்கு பின் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு தேவையா என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிடுவார் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை பொருத்தவரை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கிட்டத்தட்ட 100ஐ நெருங்கி உள்ளதால் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version