தமிழ்நாடு

ஒப்பந்த ஊழியர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

Published

on

ஒப்பந்த ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுவரை நிரந்தரமான பெண் ஊழியர்களுக்கு மட்டுமே மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒப்பந்தம் ஊழியர்களுக்கும் 6 மாத மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு ஒப்பந்த ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி 2448 சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுவரை சுகாதார பணியாளர்கள் ரூபாய் 11,000 என்று ஊதியம் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இனி அந்த ஊதியம் 14 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version