தமிழ்நாடு

கூவத்தூரில் அவிழ்த்துப்போட்டு ஆடிய கருணாஸ்: உரக்கச்சொன்ன அமைச்சர்!

Published

on

திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான கருணாஸ் தற்போது சிறையில் உள்ளார். அவர் கூவத்தூரில் அவிழ்த்துப் போட்டு ஆடியதாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சென்னை வள்ளுவர் கூட்டத்தில் பேசிய கருணாஸ் சாதி ரீதியாக கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவும், முதல்வரையும், காவல்துறையையும் விமர்சித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். மேலும் கூவத்தூர் என்ற இடம் ஒன்று இருப்பதை தான் தான் சொன்னதாகவும், முதல்வர் எடப்பாடியை நான் அடித்துவிடுவேன் என அவர் பயப்படுவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து கருணாஸ் மீது பல்வேறு பிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கருணாஸ் குறித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சித்துள்ளார்.

விருதுநகரில் நடைபெற்ற திமுகவுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கூவத்தூரில் அவிழ்த்துப் போட்டு ஆடியது கருணாஸ்தான். குடித்துவிட்டு ஆடியதும் கருணாஸ்தான். முதலமைச்சரிடம் கோயம்பேடு மார்க்கெட் கேட்டார் கருணாஸ். ஏலத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் முதல்வர். உடனே கோபத்தில் வெளியேறிவிட்டார் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version