சினிமா

விஜய்-ன் சர்கார் திரைப்படம்: எச்சரிக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜு!

Published

on

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் சர்கார். விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்தின் கதை திருடப்பட்ட கதை என பிரச்சனை உருவானது. இறுதியில் ஏஆர் முருகதாஸ் தரப்பு சமாதானம் ஆகி பிரச்சனையை சுமூகமாக முடித்தது.

இந்நிலையில் அடுத்த பிரச்சனையாக தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால் இப்படத்தின் சிறப்பு காட்சியை நேற்று நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் தமிழக செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவும் இது தொடர்பாக எச்சரித்துள்ளார்.

தற்போது பெரிய பட்ஜெட், ஸ்டார் வேல்யூ என்ற காரணம் காட்டி தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படமாக எதுவாக இருந்தாலும் அதிக கட்டணம் வசூல் செய்தால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என அறிவித்துள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. அமைச்சரின் இந்த காட்டமாக எச்சரிக்கை திரையரங்கு உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சர்கார் வசூலை வெகுவாக பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version