தமிழ்நாடு

நான் மட்டும் விளையாடி இருந்தால் இந்தியா வெற்றிபெற்றிருக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் கலகல!

Published

on

நேற்று முடிந்த உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் போராடி தோற்றுப்போனது. இதனால் இந்திய அணி கோப்பையை வெல்லும் கனவு நேற்றுடன் தகர்ந்து போனது.

இந்த போட்டியில் இந்திய முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து செல்ல இந்திய அணி மோசமான தோல்வியை நோக்கி பயணித்தது. ஆனால் ஜடேஜாவும், தோனியும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட வெற்றி இந்தியாவின் பக்கம் சற்று திரும்பி பார்ப்பது போல இருந்தது. ஆனால் முக்கியமான நேரத்தில் ஜடேஜாவும், தோனியும் ஆட்டமிழக்க இந்திய அணி வெற்றியின் விழிம்புக்கு சென்று தோல்வியை தழுவியது.

இதனால் இந்த தோல்வியை ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் இந்திய அணியின் தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர், நிச்சயமாக நான் மட்டும் உலகக் கோப்பையில் விளையாடி இருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும். எனக்கு ஒரு வாய்ப்பு வாங்கிக்கொடுங்களேன் என்றார் கலகலப்பாக.

மேலும், அரசியலிலும் விளையாட்டிலும் வெற்றி, தோல்வி என்பது சகஜமானதுதான். அதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் எப்படி தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதோ அதுபோலதான் இந்தியாவுக்கு உலகக் கோப்பையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் இந்திய அணி வெற்றிபெறும். தமிழகத்தைப் பொறுத்தவை அதிமுக என்றும் வெற்றிபெறும் என்றார் ஜெயக்குமார்.

seithichurul

Trending

Exit mobile version