தமிழ்நாடு

பிரஸ் மீட்டில் ‘ரூ.1 லட்சம் கொடுப்பதாக’ சவால்விட்டு மாட்டிக் கொண்ட அமைச்சர் ஜெயக்குமார்!

Published

on

திமுக ஆட்சியின் போது கொடுக்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வசமாக மாட்டிக் கொண்டார். இது குறித்தான காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி கேலிக்கு உள்ளாகி வருகிறது.

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ‘திமுக எந்தவொரு உறுப்படியான திட்டத்தையும் தமிழகத்திற்கும் தமிழக மக்களும் செய்ததில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழக மக்களுக்கு இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்ற பொருட்களைக் கொடுத்தோம். இதை இன்றளவும் இல்லத்தரசிகள் பயன்படுத்துகின்றனர். தமிழக இல்லங்களில் நீங்கள் அதைப் பார்க்க முடியும்.

ஆனால் திமுக ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட இலவச டிவிக்கள் இன்று எங்கேயாவது இருக்கின்றனவா? அவை எங்கேயாவது பயன்பாட்டில் உள்ளனவா? அப்படி நீங்கள் யாராவது காண்பித்து விட்டால் உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு தருகிறேன்’ என்று கூறினார்.

அதற்கு ஒரு நிருபர், ‘அப்படி நான் காண்பித்து விட்டால் எனக்கு ஒரு லட்சம் கிடைக்குமா சார்?’ எனக் கேட்டார்.

நிருபரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சிரித்து சமாளித்துள்ளார் ஜெயக்குமார்.

 

seithichurul

Trending

Exit mobile version