சினிமா செய்திகள்

நடிகை சித்ராவின் தற்கொலையில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா?

Published

on

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தற்கொலை என்று காவல்துறை தரப்பில் கூறி வந்தாலும், இதில் மர்மம் உள்ளதாக சித்ராவின் நெருங்கிய வட்டாரங்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணமாக யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சித்ராவின் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறினார். மேலும், சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்றும் தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

முன்னதாக நடிகை சித்ராவின் உடல் நேற்று அவரது உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

seithichurul

Trending

Exit mobile version