தமிழ்நாடு

தகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால் நான் தான் முதலிடம் பிடிப்பேன்: அமைச்சர் ஜெயக்குமார் சவால்!

Published

on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாகரீகம் இல்லாமல் விமர்சனம் செய்து வருகிறார் என கூறிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால் நான் தான் முதலிடம் பிடிப்பேன் என கூறி திமுகவிற்கு சவால் விடுத்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அரசியலில் தனிமனித தாக்குதலைத் துவக்கி வைத்ததே. நாகரீகம் இல்லாமல் விமர்சனம் செய்து வருகிறார். அவருடைய தந்தை கூட இலை மறை காயாய் தான் எதிர் காட்சிகளை பேசுவார்.

எனவே மு.க. ஸ்டாலின் நாவை அடக்க வேண்டும். வி.பி. துரைசாமி உள்ளிட்ட திமுகவினர் தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். மேலும் தகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால் நான் தான் முதலிடம் பிடிப்பேன். அதனால் திமுகவினர் நாவை அடக்கிக் கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் நாங்களும் பேசத் தயார் என்று சவால் விடுத்துள்ளார் அவர்.

seithichurul

Trending

Exit mobile version