தமிழ்நாடு
ஓய்வின்றி உழைத்து மேடையில் தூங்கி விழுந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!
தமிழக வனத்துறை அமைச்சராக உள்ள திண்டுக்கல் சீனிவாசன் அரசு விழா ஒன்றில் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் மேடையிலேயே தூங்கி விழுந்துள்ளார். அவருக்கு அருகில் இருந்த மாவட்ட ஆட்சியரும் தூங்கி விழுந்துள்ளார். இது பொதுக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பழனியில் கூட்டுறவுத்துறை சார்பில் பல்பொருள் அங்காடி மற்றும் பெட்ரோல் பங்க் திறப்பு விழா ஒன்று நடைபெற்றது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். இந்த விழாவின் போது அமைச்சரால் தனது தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களை துடைத்தும், முகத்தை தேய்த்தும் தூக்கத்தை கடுப்படுத்த முயன்றார் அமைச்சர்.
ஆனால் ஒருகட்டத்தில் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அசதியில் மேடையிலேயே தூங்கி விழுந்தார். மேலும் அமைச்சருக்கு அருகில் இருந்த மாவட்ட ஆட்சியர் வினய்யும் தூங்கி விழுந்துள்ளார். அமைச்சரும், ஆட்சியிரும் இப்படி மேடையிலேயே தூங்கி விழுந்தது அந்த மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இதற்கு விளக்கம் அளித்த விழா ஏற்பாட்டாளர்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஓய்வின்றி பணியின் காரணமாகவே தூங்கியதாக கூறியுள்ளனர்.