தமிழ்நாடு

டிடிவி தினகரனிடம் இருந்து சசிகலாவை காப்பாற்ற வேண்டும்: தமிழக அமைச்சர் அதிரடி!

Published

on

சசிகலாவிடம் இருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என அனைவரும் கூறிவரும் நிலையில் திடீரென டிடிவி தினகரனிடமிருந்து சசிகலாவை காப்பாற்ற வேண்டும் என தமிழக அமைச்சர் ஒருவரே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

டிடிவி தினகரனின் கட்டுப்பாட்டில்தான் சசிகலா இருப்பதாகவும் சசிகலாவை அவர்தான் ஆட்டுவித்து வருவதாகவும், தமிழக அமைச்சர் சிவி சண்முகம் அவர்கள் தெரிவித்துள்ளார். எனவே டிடிவி தினகரனிடம் இருந்து சசிகலாவை காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்த அமைச்சர் சிவி சண்முகம், இனி ஒருபோதும் சசிகலாவையும் டிடிவி தினகரனையும் அதிமுகவுடன் இணைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் சிவி சண்முகத்தின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பொதுமக்களின் உடமைக்கும் உயிருக்கும் ஆபத்து விளைவிக்க தினகரன், சசிகலா ஆகியோர் திட்டமிட்டுள்ளதாகவும் சிவி சண்முகம் சரமாரியாக குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

4 ஆண்டு சிறை வாசத்திற்குப் பின்னர் சசிகலா அதிமுகவுக்கு உரிமை கோருகிறார் என்றும் அவருக்கும் அதிமுகவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் சிவி சண்முகம் ஏற்கனவே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version