தமிழ்நாடு
ஊற்றி கொடுத்தார் தினகரன்: ஒரே நாளில் வருத்தம் தெரிவித்த அமைச்சர் சி.வி.சண்முகம்!
கூவத்தூரில் எங்களுக்கு ஊற்றி கொடுத்தது தினகரன் என்றும் அது அவரது குலத்தொழில் தான் என்றும் நேற்று கூறிய அமைச்சர் சிவி சண்முகம் ஒரே நாளில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவி சண்முகம், ‘டிடிவி தினகரனை நம்பித்தான் சசிகலா கட்சியையும் ஆட்சியையும் ஒப்படைத்து விட்டுச் சென்றார். ஆனால் அவர் நான்கு மாதத்தில் அதை உடைத்து விட்டார். நான் நிதானமாக பேசுகிறேனா? என்று அவர் கேட்கிறார். எனக்கு ஊற்றி கொடுத்ததே அவர் தான். அவரோட குலத்தொழிலே ஊற்றி கொடுப்பதுதான். கூவத்தூரில் எங்களுக்கு அவர்தான் ஊற்றி கொடுத்தார். இல்லை என்று அவரை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்’ என ஆவேசமாக பேசியிருந்தார்.
டிடிவி தினகரனை நேற்று கடுமையாக விமர்சனம் செய்து விட்டு இன்று திடீரென வருத்தம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது