தமிழ்நாடு

டவுசர்தான் அவிழும்: அமைச்சர் பேசும் பேச்சா இது!

Published

on

அதிமுக ஆட்சி கவிழும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறிவருகிறார். இதற்கு பதிலளித்துள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்து சர்ச்சைக்குறிய வகையில் அமைந்துள்ளது.

சபாநாயகர் மீது திமுக அளித்திருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்ப பெற்றிருந்தாலும் அதிமுக ஆட்சி கவிழும் என தொடர்ந்து பேசி வருகிறார் ஸ்டாலின். இந்நிலையில் கடலூரில் நேற்று முன்தினம் பேசிய ஸ்டாலின், நான் சொல்கிறேன் இந்த ஆட்சி விரைவில் கவிழப்போகிறது என்பதுதான் உண்மை என்று குறிப்பிட்டார். மேலும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்தாதது என்பது புலி பாய்வதற்கு முன் பதுங்குவது போல என்று கூறினார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அதிமுக ஆட்சி கவிழும் எனக்கூறி வருவது குறித்து அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர், அதிமுக அரசு தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நீடிக்கும். இந்த ஆட்சி மட்டுமல்ல, அடுத்த ஆட்சியும் அதிமுக ஆட்சிதான் என்றார். மேலும் அதிமுகவினருக்கு முதல்வர் போட்டிருந்த வாய்க்கட்டு அகற்றப்பட்டிருக்கும் நிலையில், ஆட்சி கவிழும் என்று சொல்பவர்களின் டவுசர்தான் அவிழும் என நாகரிகமற்ற முறையில் பதில் அளித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version