தமிழ்நாடு
மீண்டும் எல்.கே.ஜி, யூகேஜி உண்டு: பள்ளிக்கல்வித்துறையின் தடுமாற்றம் ஏன்?
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்த எல்கேஜி யுகேஜி வகுப்புகள் மூடப்படும் என சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்த நிலையில் தற்போது மீண்டும் எல்.கே.ஜி, யூகேஜி வகுப்புகள் இயங்கும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசுப்பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்பு கொண்டுவரப்பட்டன. இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டால் லட்சக்கணக்கில் தனியார் பள்ளிகளில் போய் சேர்க்கும் சுமை பெற்றோர்களுக்கு தீர்ந்தது. இதனால் பெற்றோர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் திமுக ஆட்சி தொடங்கிய நிலையில் தற்போது எல்கேஜி யுகேஜி வகுப்புகள் மூடப்படும் என்றும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் கூறப்பட்டு இருந்தது. அதற்கு பதிலாக சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அங்காடி பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசின் இந்த அறிவிப்பை அதிமுக, பாஜக, பாமக பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதுமட்டுமின்றி பெற்றோர்கள் தங்களது கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.
இந்த நிலையில் எல்கேஜி யுகேஜி வாக்குகளை மூடும் நடவடிக்கை தற்போது ரத்து செய்துள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி தொடர்ந்து செயல்படும் என்றும் இந்த வகுப்புகளுக்கு தேவையான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.